Published : 11 Jan 2017 09:16 AM
Last Updated : 11 Jan 2017 09:16 AM

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்? - தஞ்சாவூர்

தொன்மைச் சிறப்பும் வரலாறும் கொண்ட தமிழகத்தின் பல்வேறு அம்சங்கள் இன்னும் தோண்டியெடுக்கப் படவில்லை. இந்த நிலையில், குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற ஒரு சிலரின் முயற்சிகள் நம் பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதில் உதவுகின்றன. இந்த நூல் கி.பி. 600-ல் ஆரம்பித்து 1850 வரையிலான தஞ்சாவூரின் வரலாற்றைக் கல்வெட்டுகள், கோயில் கலை முதலான ஆதாரங்களைக் கொண்டு அரிய தகவல்கள், படங்களுடன் பேசுகிறது. தவற விட்டுவிடக் கூடாத நூல்.

தஞ்சாவூர்
டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்
ரூ. 400, அன்னம் வெளியீடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x