அவசரப் பட்டான், கொடுக்கப் பட்டது - சரியா?

அவசரப் பட்டான், கொடுக்கப் பட்டது - சரியா?
Updated on
1 min read

தவறு. அவசரப்பட்டான், கொடுக்கப்பட்டது என்று சேர்த்தே எழுத வேண்டும். இந்தச் சொற்களின் பிற்பகுதியில் இருக்கும் பட்டான், பட்டது ஆகிய இரண்டும் ‘-படு’என்ற துணை வினையின் வடிவங்கள். துணை வினைகளைச் சேர்த்துதான் எழுத வேண்டும். இல்லையென்றால் ‘படு’என்ற வடிவத்தில் இருக்கும் முதன்மை வினைச் சொல்லுக்கும் துணை வினைக்கும் இடையே குழப்பம் ஏற்படும்.

(எ.டு.) துணை வினை: நான் பொய் சொன்னதற்காக அவன் என்மீது கோபப்பட்டான்.

முதன்மை வினை: வெறும் தரையில் படுக்காதே.

இதேபோல்தான் ‘படுத்து’ என்ற துணை வினையும். செயல்படுத்து, வேகப்படுத்து, நடைமுறைப்படுத்து போன்ற சொற்களையெல்லாம் சேர்த்துதான் எழுத வேண்டும். இல்லாவிட்டால் ‘ரொம்பப் படுத்தாதே’என்று தொடரில் வரும் முதன்மை வினைச் சொல்லுடன் தொடர்புபடுத்திக் குழப்பிக்கொள்ள நேரிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in