Published : 20 Apr 2019 11:12 AM
Last Updated : 20 Apr 2019 11:12 AM
சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற பாலோ கொயலோவின் ‘தி அல்கெமிஸ்ட்’ நாவலை ‘ரசவாதி’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். ஆடு மேய்க்கும் சிறுவன் சான்டியாகோ, ஒரு புதையலைத் தேடி பிரமிடுகளை நோக்கி மேற்கொள்ளும் பயணமாக விரிகிறது இந்நாவல். இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. என்ன காரணம்? சகுனம், கனவுகள், எதேச்சை போன்ற நாம் பெரிதாகப் பொருட்படுத்தாத விஷயங்களை சான்டியாகோ தன் வெற்றிக்கான வழிகாட்டியாக எடுத்துக்கொள்கிறான். இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது; சுவாரசியமற்ற அன்றாடங்களை சாகசங்கள் நிரம்பியதாக மாற்றும் ‘ரசவாதி’யின் ஒவ்வொரு பக்கமும் வாசகருக்கு நேர்மறையான எண்ணங்களை விதைக்கிறது!
- கதிரவன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT