Published : 08 Jan 2019 09:39 AM
Last Updated : 08 Jan 2019 09:39 AM

குழந்தைகளுக்கான வெளி

உயர்தரத் தயாரிப்பு மட்டுமல்லாமல் குழந்தைகளின் உலகை நுட்பத்தோடு அணுகும் ‘தும்பி’ மாத இதழை ஒருமுறை புரட்டிப்பாருங்கள். குழந்தைகளை இயற்கைக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் ‘தும்பி’யின் உயரிய நோக்கம் மெச்சத்தக்கது. இந்த முறையும் ‘தும்பி’ அரங்கு (804) நம் மனம் கவர்கிறது. கிராமிய மனங்களை மண் மணத்தோடு படைப்பாக்கிய மூத்த படைப்பாளி மு.சுயம்புலிங்கம் ‘தும்பி’ அரங்குக்கு வருகைபுரிந்திருந்தார். சுயம்புலிங்கத்தோடு கழித்த நேரங்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்கள் வாசகர்கள். ‘தும்பி’ அழைக்கும் உலகம் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல. வாசகர்களே, ஒரு எட்டு எட்டிப்பாருங்கள். உங்கள் கரங்களைப் பற்றிக்கொள்ள குளுமையான கரங்களோடும் முகம் நிறைந்த புன்னகையோடும் சிவராஜ் காத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x