Published : 11 Jan 2019 09:23 AM
Last Updated : 11 Jan 2019 09:23 AM

இளம் தலைமுறைக்கு வண்ணநிலவனின் பரிந்துரைகள்

அன்பு வழியைத் தன் படைப்பிலக்கியப் பாதையாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட முன்னோடி எழுத்தாளர் வண்ணநிலவன், சென்னை புத்தகக்காட்சிக்கு வருகைபுரிந்திருந்தார்.

அவரிடம் வாசிப்பு குறித்துக் கேட்டபோது, “நான்காம் வகுப்பிலிருந்தே வாசிப்பு உலகம் என்னை இழுத்துக்கொண்டது. ஐம்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எழுத வேண்டும் என்ற ஆசையில் நான் வாசிக்கத் தொடங்கவில்லை. எனக்கு எழுத்தைவிட வாசிப்பில்தான் ஆர்வம் அதிகம்” என்றார். அவரிடம் இன்றைய தலைமுறை கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்துக் கேட்டோம். “புதுமைப்பித்தன் கதைகள், கு.ப.ராஜகோபாலன் கதைகள், ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’, அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ & ‘கரைந்த நிழல்கள்’ ஆகிய புத்தகங்களை அவசியம் வாசிக்க வேண்டும்” என்றார் வண்ணநிலவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x