Published : 13 Jan 2019 09:20 AM
Last Updated : 13 Jan 2019 09:20 AM

நான் என்னென்ன வாங்கினேன்?

மே-17 இயக்கத்தைத் தொடங்கிய திருமுருகன் காந்தி சென்னை புத்தகக்காட்சிக்கு வந்தார். “வாசிப்பு மனிதனின் வாழ்க்கையில் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

இந்தக் காலத்தில் சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி மிகப் பெரும் அரசியல், சமூக மாற்றத்துக்கு வித்திடும் இடமாக இருக்கிறது. எனவே, இளைஞர்கள் நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசித்து அதுகுறித்து சமூக வலைதளங்களில் எழுத வேண்டும்.

கூடவே, சமூக மாற்றத்துக்கான நமது விழுமியங்களையும் வாசிப்பின் வழி மேம்படுத்தி நமது ஆரோக்கியமான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும்” என்றவர், “கார்கியின் ‘தாய்’, பெரியார் சிந்தனைகள், சே குவேராவின் எழுத்துகள், அலெக்ஸ் ஹேலியின் ‘வேர்கள்’ போன்றவற்றுக்கு என்னைச் செதுக்கியதில் பெரும் பங்கு உண்டு” என்றார். “இந்தப் புத்தகக்காட்சியில் ‘மார்க்சியம் இன்றும் என்றும்’, ‘தந்தை பெரியாரின் வாழ்வும் வாக்கும்’, ‘மோடி ஆட்சி ஒரு விமர்சனப் பார்வை’ ஆகிய புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்” என்றார் திருமுருகன் காந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x