Published : 11 Jan 2019 09:24 AM
Last Updated : 11 Jan 2019 09:24 AM

இந்த பொம்மையை நானே செஞ்சேன்!

புத்தகக்காட்சியில் குழந்தைகளுக்காகப் பிரத்யேக பல்வேறு அரங்குகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கான புத்தகங்கள் மட்டுமல்லாமல், அவர்கள் கற்பனையைத் தூண்டும் விதமாகவும், புதுமையாகவும் அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியான அரங்குதான், கிராஃப்ட் ஜீன் காகித பொம்மைகள்’ அரங்கு. பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் என்றாலே குழந்தைகள் குஷியாகிவிடுகிறார்கள். சுற்றுச் சூழலுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான பொம்மைகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் இவர்கள். காகிதத்தால் ஆன பொம்மைகளின் உருவங்களுடன், அதில் வண்ணம் தீட்டுவதற்குத் தேவையான உபகரணங்களும் உள்ளன. ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் பொம்மைகளைக் கொண்டு விளையாடுவதற்கு மாற்றாகக் குழந்தைகள், பொம்மைகளைத் தங்கள் கற்பனைக்கேற்பத் தாங்களே உருவாக்கிக்கொள்ளலாம். அதை விதவிதமான வண்ணங்களில் அலங்கரித்துக்கொள்ளலாம். காகித அட்டைகளான ஆமை, நட்சத்திரம், வாத்து, விமானம் எனப் பிள்ளைகளை இந்த அரங்கிலிருந்து பிள்ளைகளை நகர்த்துவதற்குப் பெற்றோர்கள் பெரும்பாடு படுகிறார்கள்.

- ஜான்சி ராணி அப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x