Published : 13 Jan 2019 09:22 AM
Last Updated : 13 Jan 2019 09:22 AM
ராயபுரத்திலுள்ள கலைமகள் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் பள்ளி நூலகத்துக்காகப் படைதிரண்டு புத்தகக்காட்சிக்கு வந்திருந்தார்கள். “ஒருவரின் பிற்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் அவர்களின் பால்யத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதற்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். அதைப் பள்ளியிலிருந்தே செய்ய வேண்டும். ஏற்கெனவே ஒரு பட்டியலோடுதான் கிளம்பி வந்திருந்தோம். ஆனாலும் இங்கு வந்த பிறகு எங்கள் பட்டியலை விஸ்தரித்துக்கொண்டோம். பொது அறிவு, பாரதியார் கவிதைகள், ஓவியப் புத்தகங்கள், ஷேக்ஸ்பியர், ரஸ்கின் பாண்ட், ஆர்.கே.நாராயணன் புத்தகங்கள் வாங்கினோம். சிறுவர்களுக்கான கதைகள், முக்கிய ஆளுமைகளின் வரலாற்றுக் கதைகளும் வாங்கியிருக்கிறோம்” என்றனர்.
- ஜான்சி ராணி அப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!