Published : 07 Jan 2019 09:04 AM
Last Updated : 07 Jan 2019 09:04 AM
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தகத்தில் தனது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு அரசியல் அமைப்பில் பணியாற்ற எப்படியான ஒழுங்கெல்லாம் தேவைப்படுகிறது என்பதைப் பதிவுசெய்திருக்கிறார். சமூகம், அரசியல் பொருளாதாரம், கலாச்சாரம் என அமைப்பு என்பது என்னவாக இருக்கிறது? அமைப்பின் நோக்கம், இலக்கு, கொள்கை, வடிவம், விதிமுறைகள் என்னென்ன? மிக முக்கியமாக, மக்களை ஏன் அமைப்பாக்க வேண்டும் என பல்வேறு அமைப்பு சார்ந்த கேள்விகளுக்கு விடைதேடுகிறார் திருமாவளவன்.
அமைப்பாய்த் திரள்வோம்
தொல்.திருமாவளவன்
நக்கீரன் வெளியீடு
விலை: ரூ.450
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT