Published : 01 Dec 2018 11:28 AM
Last Updated : 01 Dec 2018 11:28 AM
இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்குச் சிலை வைத்தான் சேரன் என்பார்கள். அந்த இமயத்தின் சாரலில் உள்ள சிம்லாவில் செயல்பட்டுவரும் இந்திய உயராய்வு நிறுவனம் சிலம்பு, மேகலை காப்பியங்கள் பற்றிய இரண்டு நாள் ஆய்வுக் கருத்தரங்கை சமீபத்தில் நடத்தியிருக்கிறது. அக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் பழனி.அரங்கசாமி, ராஜமாணிக்கம், சங்கீதா, சுப்பராயலு, ராஜகோபாலன் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு கோணங்களில் இரட்டைக்காப்பியங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர். விரைவில் இக்கட்டுரைகள் புத்தகமாகத் தொகுக்கப்படவிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT