Published : 18 Dec 2018 08:56 AM
Last Updated : 18 Dec 2018 08:56 AM

பொக்கிஷமா? அடுத்த தலைமுறைக்கு அதைக் கடத்து!

ஈரோடு மருத்துவர் வெ.ஜீவானந்தம், தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களுக்கே சவால் விடும் வேகத்தில் புத்தகங்களை மொழிபெயர்க்கிறார்.

ஆப்பிரிக்காவில் காந்தியுடன் சத்தியாகிரகப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு போராடிய தில்லையாடி வள்ளியம்மையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘சோல் ஃபோர்ஸ்’ நூலை இப்போது மொழிபெயர்த்துக்கொண்டிருப்பவர் “படிக்கும்போதே மூளை ஒருகட்டத்தில் தானாக மொழிபெயர்க்க ஆரம்பித்துவிடுகிறது. நமக்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்கள் நாம் சார்ந்த சமூகத்துக்கும் போக வேண்டும் என்பதைத் தாண்டிய நோக்கம் வேறில்லை” என்று சொல்பவர், சிறிதும் பெரிதுமாக மொழிபெயர்த்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை நூறைத் தொடுகிறது. இவற்றில் பல நூல்கள் சொந்தப் பணத்தில் பதிப்பிக்கப்பட்டு, அவற்றில் பெரும்பான்மைப் பிரதிகள் இலவசமாக இளையோருக்கு அளிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x