Published : 23 Dec 2018 07:48 AM
Last Updated : 23 Dec 2018 07:48 AM

எழுத்துக்கு சூட்டிய மகுடம்

வாசிப்புப் பழக்கத்தைத் தன் கடைசி காலம் வரை தொடர்ந்துகொண்டிருந்தவர் பிரபஞ்சன். மிக இளம் வயதிலேயே பல நூறு புத்தகங்களை வாசித்தவர். அறியப்படாத வரலாற்றுப் படைப்புகளையும் அரிய மனிதர்களையும் ‘எமதுள்ளம் சுடர் விடுக’ என்ற பெயரில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் தொடராக எழுதி தமிழ் மனங்களிடம் கொண்டுசேர்த்தார். அவரது வாசிப்பின் மகத்துவம் இந்தத் தொடரில் துலக்கமாக வெளிப்பட்டது. இத்தொடர் வெளியாகும் காலத்தில் தமிழ் வாசகர் உலகம் கொண்டாடித் தீர்த்தது. அவர் இறந்த நாளில் இந்தத் தொடர், புத்தகமாக வெளிவந்தது குறிப்பிடத்தகுந்தது!

எமதுள்ளம் சுடர் விடுக

பிரபஞ்சன்

இந்து தமிழ் திசை வெளியீடு

124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை, சென்னை-2.

விலை: ரூ.180,  74012 96562

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x