Last Updated : 25 Aug, 2018 09:33 AM

 

Published : 25 Aug 2018 09:33 AM
Last Updated : 25 Aug 2018 09:33 AM

கோலோச்சும் ஜனரஞ்சகர்கள்

தொடர்ந்து ஏற்பட்டுவரும் பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண்பதில் வலதுசாரி, இடதுசாரி கட்சிகள் தோற்றுவிட்டன. இக்கட்சிகளின் ஊழல் ஆட்சிகளால் அவற்றின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கையைக் குலைத்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எனவே, ஜனரஞ்சகவாதிகள் பல நாடுகளில் ஆட்சியைப் பிடித்துள்ளனர். “மக்கள் எளிமையானவர்கள், நேர்மையானவர்கள். ஆட்சியில் இருப்போர் ஊழல் செய்பவர்கள், மேல்தட்டு வர்கத்தினர்; இவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள்” என்று 2 குழுக்களாக அடையாளப்படுத்துகிறார்கள் ஜனரஞ்சகவாதிகள். “தாங்கள் மட்டுமே மக்களின் உண்மையான பிரதிநிதிகள். தாங்கள் சொல்வது மக்களின் கருத்து” என்றும் ஜனரஞ்சகவாதிகள் கூறுவர். இவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் இரு துருவங்களாக உள்ளன. ஊழலுக்கு வழிவகுக்கும் அதிகாரம் ஆட்சியாளரிடம் இருக்கக் கூடாது, சந்தைப் பொருளாதாரம் கட்டுப்பாடில்லாமல் செயல்படுத்துதல் வேண்டும் என்ற வலதுசாரி பொருளாதாரக் கருத்தைக் கூறலாம். இதற்கு நேர்மாறாக மக்கள் எளிமையானவர்கள், அவர்களுக்கு ஆதாரவாக எல்லா அதிகாரமும் கொண்ட வலுவான ஆட்சி தேவை என்ற இடதுசாரிக் கொள்கையையும் கூறலாம். ஐரோப்பிய நாடுகளில் ஜனரஞ்சகவாதிகளின் எழுச்சியைத் தேர்தல் புள்ளிவிவரங்களுடன் சுவாரசியமாக எழுதப்பட்ட இக்கட்டுரையைப் படித்துப்பாருங்கள்.

Tito Boeri, Prachi Mishra, Chris Papageorgiou and Antonio Spilimbergo “A Dialogue between a Populist and an Economist”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x