Published : 11 Aug 2018 09:21 AM
Last Updated : 11 Aug 2018 09:21 AM

தனுஷ்கோடியின் கைவண்ணத்தில் அசோகமித்திரன்!

தமிழுக்கு காஃப்கா விருந்தளித்தவர் ஏ.வி.தனுஷ்கோடி. அமரத்துவம் பெற்ற ஃப்ரன்ஸ் காஃப்காவின் ‘விசாரணை' நாவலை ஜெர்மன் மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்தவர் அவர்.

தொடர்ந்து, மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டாவிட்டாலும் ஓவியம் வரைவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டார். அவர் வரைந்த அசோகமித்திரனின் ஓவியம் ஒன்றைச் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் தனுஷ்கோடி.

அது இலக்கிய வாசகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அசோகமித்திரனின் சிறுகதைகளைத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்த்திருக்கிறார் தனுஷ்கோடி. தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வரைந்துகொண்டிருக்கும் ஏ.வி.தனுஷ் கோடிக்கு வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x