உணர்வுகளின் ஆலாபனை | நூல் வெளி

உணர்வுகளின் ஆலாபனை | நூல் வெளி
Updated on
2 min read

சுகுமாரன் கதைகள், 1983இல் தொடங்கி இந்த 2025 வரையிலான நீண்ட காலகட்டத்தில் பயணித்திருப்பவை. இந்தக் காலகட்டத்திற்குள் தமிழ்ச் சிறுகதைப் போக்குகள், சுகுமாரன் என்கிற தனிமனிதனின் உள்ளுக்குள் நடந்த மாற்றங்கள் ஆகிய இரு அம்சங்களையும் பிரதிபலிப்பவையாக இந்தக் கதைகள் உள்ளன. தன்னுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத, பாதிக்காத ஒரு சம்பவத்தைக் கதைப் பொருளாகக் கொள்ள சுகுமாரனுக்கு விருப்பம் இல்லை. சுகுமாரன் குறைவாக எழுதியதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

புது​மைப்​பித்​தன் தொடங்​கிய தமிழ் நவீனச் சிறுகதை​யின் தொடர்ச்சி என இவரது கதைமொழியை வரையறுக்​கலாம். கதையைச் சட்​டெனத் தொடங்​கு​வ​தில், அதை எடுத்​துச் செல்​வ​தில் சுகு​மாரனின் சிறுகதை மொழிக்கு தயக்​கமே இல்​லை. சுகு​மாரனின் காதல் கவிதைகளில் வெளிப்​படும் நினை​வேக்​கம், இந்​தத் தொகுப்​பிலுள்ள பெரும்​பாலான கதைகளில் பல்​வேறு உணர்வு சார்ந்து ஏற்​படு​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in