காயங்களின் கலைமொழி | நூல் நயம்

காயங்களின் கலைமொழி | நூல் நயம்
Updated on
3 min read

பிரித்தானியர்களின் காலனிய ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது மியான்மர் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட பர்மாவும் ஒன்றாகும். பர்மாவில் காலனி ஆட்சியிலிருந்து 1948இல் சுதந்திரம் பெற்றபிறகு சில ஆண்டுகள் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வந்தாலும், பல இனப்பிரிவினரிடையே மோதல்கள், அரசியல் நிலைகுலைவு இருந்த வண்ணமே இருந்தன. அதன்பிறகு, 1962இல் ஜெனரல் நெய் வின் தலைமையில் பர்மாவில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

ராணுவ ஆட்சியின் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை வெளிக்காட்டும் விதமாக அமைந்தது ‘காயங்களால் மறைக்கப் பட்டவர்கள்’ என்னும் இக்கவிதை நூல். 13 கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் இத்தொகுப்பை பா.இரவிக்குமார் மற்றும் ப.கல்பனா தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in