பாண்டிய நாட்டின் வியப்பூட்டும் வணிக வரலாறு | நூல் வெளி

பாண்டிய நாட்டின் வியப்பூட்டும் வணிக வரலாறு | நூல் வெளி

Published on

தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகறியச் செய்வதில் கீழடி அகழாய்வு முந்தியிருக்கிறது. கல்வி, சுகாதாரம், நகரமயமாதல், பொது நிர்வாகம், வணிகம் முதலானவற்றில் வளர்ச்சி அடைந்தவர்களாகத் தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளனர் என்பதையும் தங்களுக்கென தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருந்தனர் என்பதையும் உரக்கச் சொல்லும் சான்றாக இது அமைந்திருக்கிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, ‘பாண்டியநாட்டில் வணிகம் வணிகர் வணிக நகரங்கள்’ புத்தகம் வெளிவந்திருக்கிறது. நூலாசிரியர் முனைவர் வெ.வேதாசலம், தொல்லியல், கலை, வரலாற்றாய்வில் மூன்று தசாப்தங்கள் அனுபவம் மிக்கவர்.

கரூர், கோவலன்​பொட்​டல் (மதுரை), திருத்​தங்​கல், மாங்​குடி, தொண்​டி, அழகன்​குளம், கீழடி, கொடுமணல் முதலிய இடங்​களில் உள்ள தொல்​லியல் தலங்​களில் நடை​பெற்ற அகழாய்​வு​களில் ஈடு​பட்​ட​வர். பாண்​டிய நாடு என சங்​க​காலம் தொட்டு அறியப்​படும் புதுக்​கோட்​டை, திண்​டுக்​கல், தேனி, மதுரை, சிவகங்​கை, இராம​நாத​புரம், விருதுநகர், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, தென்​காசி, கன்​னி​யாகுமரி ஆகிய மாவட்​டங்​களை அடக்​கிய பகு​தி​களின் வணிக பண்​பாட்​டினை உள்​ளும் புற​மு​மாக ஆராய்ந்து இந்​நூலை எழு​தி​யுள்​ளார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in