

ராமச்சந்திரகுடி என்னும் கிராமத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை ‘அனிதா’ என்னும் ஆசிரியர் மனதுக்குள் அசைபோட்டு, தன் வாழ்க்கையைப் பகிர்வதே ‘இருளி’ நாவல். அனிதா தன் வாழ்க்கையை முன்னும் பின்னுமாக சென்று பார்த்து அலசும் ‘நனவோடை’ உத்தியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
மனிதக் கைகளால் மலம் அள்ளி அப்புறப்படுத்தும் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களும் ஆண்களும்தான் கதை மாந்தர்கள். 1993ஆம் ஆண்டு இந்தியாவில் கையால் மலம் அள்ள தடை விதித்து சட்டம் வருவதற்கு முன்பாக கிராமம் ஒன்றில், மலம் அள்ள ‘விதிக்கப்பட்ட’ ஏழு குடும்பங்களின் கதையை சொல்கிறது இருளி.