

ஆங்கில வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான அறிஞர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனின் நூல்கள் அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் மொழிபெயர்ப்புகளால் தமிழ் அறிவுலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழின் நவீன கால வரலாற்றை இந்நூல்களைத் தவிர்த்துவிட்டு எழுதுவது கடினம்.
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் வளர்ந்த அறிவு மரபை மையமிட்டவை இவரின் ஆய்வுகள். அந்த வகையில் புதுவை சீனு.தமிழ்மணியின் அழகிய மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள தமிழ் உரைநடை வரலாறு குறித்த நூல் முக்கியத்துவமுடையது. தமிழில் தோன்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள், தருக்க நூல்கள், கதை, சிறுகதை, புதினம் ஆகிய உரைநடை வடிவங்களை மையமாக வைத்து ஆராய்கிறது இந்நூல்.