

‘பாரதி தினத்தை ஒட்டி பாரதியைப் பற்றி நான் கண்டறிந்த உண்மைகளைக் கட்டுரை வடிவில் வழங்கி வருவதை ஒரு கடமையாகவே மேற்கொண்டு வந்துள்ளேன்’ என ‘பாரதி - சில பார்வைகள்’ நூலுக்கான முன்னுரையில் கூறுகிறார் எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன். வாழ்நாள் முழுதும் அவரை ஆட்கொண்டுவிட்ட ஆளுமையாக பாரதியார் இருந்தார்.
1982இல் பாரதியின் முதல் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட நேரத்தில் இந்நூலின் முதல் பதிப்பு வெளியானது. இதில் உள்ள 11 கட்டுரைகள் மூலமாக, புதிர்போலத் தோற்றமளிக்கும் பாரதியின் சில படைப்புகளுக்குப் பிந்தைய – நாம் அறியாத காரணிகளை ரகுநாதன் சுவைபட முன்வைக்கிறார்.