ஆளுக்கொரு நியாயம் | அகத்தில் அசையும் நதி 23

ஆளுக்கொரு நியாயம் | அகத்தில் அசையும் நதி 23
Updated on
3 min read

மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை ஏதோவொரு காரணத்தைச் சொல்லி அந்தப் பெண் காவலர் கைபேசியில் என்னைக் கூப்பிட்டுப் பேசிக்கொண்டே இருந்தார். மறுநாள் காலை வீட்டுக்கே வந்து அழைத்துச் செல்வதாய்த் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

என்னுடைய இருப்பையும் மறுநாள் என்னுடைய நீதிமன்ற வருகையையும் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பது அவருக்கு விதிக்கப்பட்ட ஆணையாக இருக்கலாம் என்று தோன்றியது. இதற்கிடையே செல்வராசு தரப்பிலிருந்து கரடுமுரடான ஆட்கள் சிலர் சற்று மிரட்டும் தொனியில் பேச ஆரம்பித்திருந்தார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in