

ரஷ்யாவில் முற்போக்குப் புத்தகங்கள் மீது போர் நிகழ்த்தப் பட்டுவருவதாக மொழிபெயர்ப்பாளரும் பத்திரிகையாளருமான அன்னா அஸ்லான்யன், ‘தி கார்டியன்’ தளத்தில் வெளியான தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 1990களின் தொடக்கத்தில் ரஷ்யாவில் புத்தகங்கள் மீதான தணிக்கை முழுவதுமாக அகற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து எழுத்தாளர்கள் தங்களது கருத்துகளை எவ்விதத் தணிக்கையுமின்றி வெளியிடும் நிலை சில காலத்துக்கு நிலவியது. 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா தன் சொந்த நாட்டு பால்புதுமையர் படைப்புகளை இயற்றுவது சட்டப்படி குற்றம் என அறிவித்தது.