புதுவடிவம் கொள்ளும் மண்டோதரி | நூல் நயம்

புதுவடிவம் கொள்ளும் மண்டோதரி | நூல் நயம்
Updated on
1 min read

எண்டமூரி வீரேந்திரநாத், ஒல்கா, முகம்மத் கதீர்பாபு, அப்பூரி சாயாதேவி, என்.ஸ்ரீதர் உள்ளிட்ட தெலுங்கு எழுத்தாளர்கள் 15 பேர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. மொழிபெயர்ப்புப் பணியில் பல ஆண்டு அனுபவம் உள்ள கௌரி கிருபானந்தன் இவற்றை மொழிபெயர்த்துள்ளார்.

உறவுகளை எடை போட்டே பழகி விட்ட இன்றைய நவீன காலத் தலைமுறையின் தடுமாற்றத்தை ‘அத்தைமடி’ சிறுகதை சித்திரிக்கிறது. அப்பா இல்லாத நிலையில் அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்த ஒருவனின் திருமண வாழ்க்கை எத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதை ’அம்மா சொல்படி’ கதை காட்டுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in