

அறைக்குள் வந்த அந்தப் பெண் காவலர்கள் இருவரின் முகத்திலும் நட்புக்கான புன்சிரிப்பு இருந்தது. உட்காரச் சொன்னேன்.
“சாப்டீங்களா மேடம்?” “இன்னும் இல்ல.” “மணி அடிக்கிறத்துக்குள்ள நீங்க சாப்ட்டு வந்துருங்க மேடம். நாங்க வெயிட் பண்றோம்” என்றனர் இருவரும்.
“பரவால்ல இன்னக்கி கார்த்திகை விரதம். பழம் மட்டும்தான் சாப்புடுவேன். ஒண்ணும் பிரச்சனயில்ல” என்றேன். “அப்படின்னா சரிங்க மேடம், நீங்களும் ஒக்காருங்க” என்றனர். வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் போல அவர்களது விசாரிப்புகள் இருந்தன.