

உலகத் தமிழ் ஓசை என்கிற மாத இதழை நடத்தியவர் பேராசிரியர் சி.எஸ்.எஸ்.சோமசுந்தரனார். இத்தகைய முயற்சிகளால் நிகழும் பொருளாதார இழப்புக்கு இவரும் விதிவிலக்கல்ல. ‘உலகத் தமிழர் கலைக்களஞ்சியம்’ நூலை வெளியிடுவது அவரது வாழ்நாள் லட்சியமாக இருந்தது.
நூல் வெளிவரும் முன்பே சோமசுந்தரனார் இறந்துவிட்டார். தனது பெருங்கனவான இந்த நூலை வெளிக் கொண்டுவர வேண்டும் என அவரால் அன்புடன் பணிக்கப்பட்ட இ.கே.தி.சிவகுமாரைப் பதிப்பாளராகக் கொண்டு இந்த நூல் இறுதியில் 2006இல் வெளிவந்தது. அது மீண்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.