

“பம்பாய்க்கு ஓடி ரெண்டு வருஷம் அங்கயே கெடந்து பட்டுத் திருந்தி வந்துருப்பான்னுதான்மா எல்லாருமே நெனச்சோம். ஆனா அவன் ரவகூட திருந்தலம்மா.” ஆயாவின் பேச்சுக்கிடையே நான் எதுவும் குறுக்கிட வேண்டாமென்று நினைத்து அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தேன். “நல்லது கெட்டத வாங்கிக் குடுத்து அந்தப் புள்ளய மறுபுடியும் அவன் சொல்லுபேச்ச கேக்குற மாதிரி மாத்திட்டான்மா.
இது யாருக்குமே தெரியல. அந்தப் புள்ள வெடவெடன்னு ஊதிவுட்டா பறந்துடற மாதிரிதாம்மா இருப்பா. திடீருன்னு பாத்தா வயிறு மட்டும் சாலபானை மாதிரி தெரியுது. அதுக்கப்பறமாத்தான் சந்தேகப்பட்டு எல்லாம் விசாரிக்குது. பங்காளிங்க எல்லாருமா சேந்து மறச்சி மண்ணள்ளிப் போட்டுடலாம்ன்னுதான் நெனச்சோம். ஆனா அது முடியாம போயிட்டுது.