சோம வீரப்​பனுக்கு ‘சிறந்த எழுத்​தாளர்’ விருது

பெங்​களூரு​வில் நடை​பெற்ற நகரத்​தார்​களின் சர்​வ​தேச வர்த்தக மாநாட்​டில் எழுத்​​தாளர் சோம வீரப்​பனுக்கு ‘சிறந்த எழுத்​​தாளர்’ விருது வழங்​கப்​பட்​டது.
பெங்​களூரு​வில் நடை​பெற்ற நகரத்​தார்​களின் சர்​வ​தேச வர்த்தக மாநாட்​டில் எழுத்​​தாளர் சோம வீரப்​பனுக்கு ‘சிறந்த எழுத்​​தாளர்’ விருது வழங்​கப்​பட்​டது.
Updated on
1 min read

சென்னை: எழுத்​தாளர் சோம வீரப்​பனுக்கு ‘சிறந்த எழுத்​தாளர்’ விருது வழங்​கப்​பட்​டது. நகரத்​தார்​களின் சர்​வ​தேச வர்த்தக மாநாடு பெங்​களூரு​வில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்​தது.

இதையொட்​டி, நேற்று முன்​தினம் மாலை நடை​பெற்ற விழா​வில், சிறந்த ஸ்டார்ட் அப், சிறந்த குடும்ப நிறு​வனம், வாழ்​நாள் சாதனை​யாளர் உள்​ளிட்ட விருதுகள் வழங்​கப்​பட்​டன. மேலும், எழுத்​தாளர் சோம வீரப்​பனுக்கு ‘சிறந்த எழுத்​தாளர்’ விருது வழங்கப்பட்​டது.

திருக்​குறளில் உள்ள மேலாண்மை கருத்​துகள் குறித்​தும், சாணக்​கியரின் பொன்​மொழிகள் குறித்​தும் அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தொடர்ந்து நான்​கரை ஆண்​டு​கள் 226 கட்​டுரைகளை எழு​தி​யுள்​ளார். அவரது ‘குறள் இனிது ’ நூல் தமிழ் மட்​டுமின்​றி, ஆங்​கிலம், இந்​தி, பஞ்​சாபி, ஒடியா ஆகிய 5 மொழிகளில் வெளி​யாகி, சிறப்​பாக விற்​பனை​யாகிக் கொண்​டிருக்​கிறது. மேலும், விரை​வில் பிரெஞ்ச், குஜ​ராத்​தி, மலை​யாள மொழிகளி​லும் வெளி​யாக உள்​ளது.

பல்​வேறு மாநிலங்​கள் மற்​றும் வெளி​நாடு​களில் 8 மொழிகளில் ‘வள்​ளுவர் உலகின் மூத்த மேலாண்​மைக் குரு’ எனும் கருத்தை கொண்​டு ​சென்று சேர்த்​துள்​ளார். இந்த மாநாட்​டில் இந்​தியா மட்​டுமின்​றி, அமெரிக்​கா, ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, துபாய், மலேசியா போன்ற நாடு​களில் இருந்து 600-க்​கும் மேற்​பட்ட பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொண்​டனர்.

அவர்​களுக்கு எழுத்​தாளர் சோம வீரப்​பன் எழு​திய “Trusting & Entrusting” என்ற ஆங்​கில நூல் வழங்​கப்​பட்​டது. நிகழ்ச்சியில், ஐபிசிஎன் தலைவர் விப்ரோ ரவி வீரப்பன், மருத்துவர் பால், சொக்கு வள்ளியப்பன், விசாலாட்சி, சித்தார்த், அக் ஷரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in