

வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களைப் பற்றிய வரலாற்றைச் சொல்லும் புத்தகம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வடகிழக்கில் அசாம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே இருந்தன.
பின்னர் பிரிக்கப்பட்டு மேலும் சில மாநிலங்கள் உருவாகின. இதில் அசாம் மாநிலத்துக்குப் பெரும் வரலாறு இருக்கிறது. அதன் கலை, இலக்கியம், பண்பாடு அனைத்தும் தாய்லாந்து நாட்டை சார்ந்தவை என்பதையும் பல்வேறு காலகட்டங்களில் அப்பகுதியின் அரசர்கள், அவர்கள் எதிர்கொண்ட போர்கள் உள்ளிட்ட விஷயங்களை, வரலாற்றுத் தகவல்களோடு விவரிக்கிறார் ஆசிரியர்.