

தமிழின் பெருமைமிகு அறநூலான திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுத்து, வாசகர்களின் தலைமைப் பண்பையும், ஆளுமையையும் வளர்க்க குறள் காட்டும் வழிகளைத் திரட்டி, வாரா வாரம் இந்து தமிழ் திசை நாளதழின் ‘வணிகவீதி’ இணைப்பிதழில் எழுதினார் சோம வீரப்பன்.
வாசகர்களிடம் பெரும் வரவேற்றைப் பெற்ற இந்தத் தொடர், ‘குறள் இனிது’ என்ற தலைப்பில் 2018ஆம் ஆண்டு இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் சார்பில் நூலாக வெளிவந்ததது. 125 கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல் கடந்த ஏழு ஆண்டுகளில் எட்டு பதிப்புகளுடன் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.