

பேச்சுக் கலையில் சிறந்தவர்கள் மேடைகளில் பேசிவிட்டு, கைதட்டல்களை எளிதில் வாங்கிவிட முடியும். ஆனால், அவர்களின் பேச்சை எழுத்தில் கொண்டுவரும்போதுதான் அது சிந்திக்க வைக்கும் பேச்சா, சிந்தனையை மழுங்கடிக்கும் பேச்சா என்பது தெரியவரும்.
மேடைப் பேச்சை முக்கியமானதாகக் கருதி, ஏராளமான புத்தகங்களைப் படித்து, தகவல்களைச் சேகரித்து, பொருத்தமான இடத்தில் அவற்றைச் சேர்த்து, கேட்போர் நினைவில் என்றென்றும் தங்கிவிடுகிறார் ஸ்டாலின் குணசேகரன். புத்தகத் திருவிழாக்களில் அவர் பேசிய அத்தகைய சிறந்த உரைகளைத் தொகுத்து, ‘காகிதப் புரட்சி’ என்கிற பெயரில் கொண்டு வந்திருக்கிறார் வே. குமரவேல்.