

எழுத்துகளால் குவிந்திருக்கும் இலக்கியங்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை ஆழமாகச் சொல்ல வருகின்றன. அந்த எழுத்தின் வழி ஒரு எழுத்தாளன், தன்னைப் பாதித்த, தாக்கத்தை ஏற்படுத்திய, சமூகத்தின் மீதான கோபத்தை அல்லது அப்படி ஏதும் இல்லாததைப் படைப்புகளாக வெளிகொண்டு வருகிறான்.
அது கவிதையாகவோ, சிறுகதையாகவோ, நாவலாகவோ ஏதோ ஓர் இலக்கிய வடிவத்துக்குள் வந்தடைந்து விடு கிறது. வாசக ரசனையின் அடிப்படையில் அப்படைப்புகள், தங்களுக்கான இடத்தைத் தேடி அடைகின்றன. எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் சிறுகதைகளும் அப்படித்தான்.