Published : 03 Jun 2025 07:55 AM
Last Updated : 03 Jun 2025 07:55 AM

ப்ரீமியம்
பாதியில் நின்ற படிப்பு | அகத்தில் அசையும் நதி 16

ஆதிமூலம் ரேவதி டீச்சரை நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். “எப்போ வேலைக்குவந்தீங்க, எங்கங்க வேல பாத்தீங்க? இவங்களப் பாத்திருக்கீங்களா? இப்ப இருக்குறது சொந்த வீடா, வாடகை வீடா?” என ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தார். ரேவதி டீச்சர் அவ்வப்போது கிருஷ்ண மூர்த்தி வாத்தியாரின் ஒளிப் படத்தைப் பார்த்தபடியே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு இந்த உரையாடலில் மனம் பதியவில்லை.

“ஏதோ பள்ளிக்கொடத்து எடப் பிரச்சனை பத்தி பேசணும்னுல்ல வந்தீங்களாம். என்ன பிரச்சன? வடக்கால மண்ணுண்டன்னு ஒருத்தன் ஆட்டுப்பட்டி வச்சிக்கிட்டு இருந் தானே அவனா பிரச்சனைக்கு வாரவன்?” “ஆமா அந்தாளு நான் சொன்ன மாதிரி பிரச்சன பண்ணுனாருதான். ஆனா இப்ப இல்ல. நாலு வருசத் துக்கு முன்னாடியே போலீஸ்ல கேசு கொடுத்து, எடத்த அளந்து பேசி முடிச்சி கையோட மதில்சுவரும் வச்சிட்டோம். இப்ப அது மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்ல.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x