

மானிடவியலாளர் பக்தவத்சல பாரதியின் இந்நூலில், 54 ஆளுமைகளின் கிராம வாழ்க்கை சார்ந்த சித்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கட்டுரையாளர்கள், தங்கள் நினைவுகளில் இருந்து பால்யகாலக் கிராமத்தை மீட்டெடுத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கிராமம் குறித்த பெயர்க்காரணமும் சுவாரசியமாக இருக்கின்றன. கதை கேட்பதிலுள்ள சுவாரசியம் இந்தக் கட்டுரைகளைப் படிப்பதிலும் கிடைப்பதுதான் இந்நூலின் சிறப்பு. தமிழகம், இலங்கையின் அரைநூற்றாண்டுக்கு முந்தைய கிராமங்களையும் அதன் இயக்கத்தையும் தெரிந்துகொள்ள இந்நூல் பயன்படும்.