

முதுமைக்குப் பழைய நினைவுகளே, ஆறுதல். அசை போட்டு மகிழ்தல் எப்போதும் ஆனந்தம். தேனி சீருடையான் எழுதியிருக்கும் ‘ஊத்து’ நாவலும் அப்படித்தான். பார்வை மங்கிவிட்ட அறுபது வயதான பாலமுருகனின் நினைவைத் தூண்டுகிறது, ஒரு ஃபோன் அழைப்பு. அது அவரை காலத்தின் பின்னோக்கி, தனது பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச் செல்கிறது.
அது, பார்வையிழந்தோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி. ஆந்திரா, கேரளா, உ.பி என பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களில், பாலமுருகனுக்கும் மகாலட்சிமிக்குமான காதல், படித்து முடித்த பின் பார்வை கிடைக்கிற பாலமுருகன் கால ஓட்டத்தில் என்னவாகிறார் என்பதைச் சொல்லும் நாவல் இது.