

இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை நிலைபெறச் செய்தவர்களில் ஒருவர், ராபர்ட் கிளைவ். இவர் அன்றைய சென்னை மாகாணத்தில்தான் கிழக்கிந்தியக் கம்பெனி எழுத்தராக வாழ்க்கையைத் தொடங்கியவர். பிறகு இவர் அன்றைய இந்திய பிரெஞ்சு ஆளுநர் டூப்ளே மேற்கொண்ட கிழக்கிந்தியக் கம்பெனி படைமீதான தாக்குதலை முறியடிக்க உதவினார் என கிளார்க் பெயர் பெற்றார்.
எதிரிகளை நேரடியாக எதிர்கொள்ளாமல் சூழ்ச்சிகரமாக எதிர்கொண்டு வீழ்த்தும் நயவஞ்சகத்துக்கும் பெயர் பெற்றவராக விளங்கினார். இவர் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதனால் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கியும் சேமித்துவைத்த லஞ்சப் பணத்தில் ஒரு பெரும் பணக்காரராகவும் வாழ்ந்து மறைந்தார். பெண் தொடர்புகளை முதன்மைப்படுத்தி அவரது வாழ்க்கை வரலாற்றை இந்த நாவல் பேசுகிறது. - விபின்