

என்ன செய்யலாம் என்று நீண்ட நேரமாக யோசித்துக்கொண்டிருந்த ரேவதி டீச்சருக்கு எதுவும் பிடிபடவில்லை. சக பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஆலோசனை கேட்கலாம் அல்லது ஆசிரியர் இயக்க நிர்வாகிகளிடம் கேட்கலாம்.
ஆனால், அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பது நன்றாகத் தெரியும். ‘பள்ளிப் பதிவேட்டில் என்ன இருக்கோ அதக் கொடுங்க. ரிஸ்க் எடுக்காதீங்க’ என்பார்கள். அதற்கு மேல் அவர்கள் இந்த விஷயத்தில் எதுவும் செய்துதரப் போவதில்லை. எனவே அவர்களிடம் இது பற்றிச் சொல்லாதிருப்பதே நல்லது என நினைத்தார்.