

புத்தரின் சொற்களைத் தன் நினைவிலிருந்து மீட்டெடுத்து, தம்ம பிடகத்தை கட்டமைத்த ஆனந்தரின் கதையிலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. ஆனந்தி, யசோதா, கௌதமி எனப் புத்தர் வாழ்க்கையில் தொடர்புடைய பெயர்களே சமகாலத்தில் நிகழும் இந்தக் கதையிலும் புழங்குகின்றன.
மரபான கதை சொல்லலாக இல்லாமல் ஆனந்தியின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் நூலில் கடைபரப்பப் படுகிறது. மாற்றுப் பாலினத்தவரின் வாழ்வில் ஏற்படும் மகிழ்வான தருணங்கள், நொய்மையான தருணங்கள் என கலவையாகக் காட்சிகள் விரிகின்றன.