

வெளிப்பார்வைக்குத் தெரியாத இவ்வளவு பெரிய குறை தனக்கு இருப்பதை நிலாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதையும் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விளையாட்டுபோல் திருமணம் செய்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து வருந்தினாள். கதிர்வேலுதான் இந்த நேரத்தில் அவளுக்கு வலுவான துணையாக நின்று அவளை ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தான்.
“நிலா உனக்குத் தெரியாததில்ல. மருத்துவத்துல இன்னைக்கு முடியாத துன்னு எதுவுமே இல்ல. எத வேணுன் னாலும் நம்ம பண்ணிக்கலாம். நீ கவலப்படாத.” “கொழந்தைய தத்து எடுத்துக்க லாம்னு சொல்றீங்களா?” “அது மாதிரியும் செய்யலாம்தான். ஆனா, சொந்தக்காரங்க எல்லாரும் ஏன் எதுக்குன்னு ஆயிரம் கேள்வி கேப்பாங்க. எல்லாருக்கும் பதில் சொல்லிக்கிட்டிருக்க முடியாது. கொஞ்சம்கூட நிம்மதியில்லாம போயி டும். அதனால நாம யாருகிட்டயும் எந்த உண்மையையும் சொல்ல வேண்டாம். நாம கொழந்த பெத்துக்கலாம்.”