

எழுத்தாளர் தில்லை எழுதிய ‘தாயைத்தின்னி' என்னும் நாவல் தன்னியக்கப் புனைகதையாக வந்துள்ளது. காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்வதாகப் போக்கு காட்டி வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் கதையாகத் தொடங்கி, ஒரு சிறுமி எழுதிய நாட்குறிப்பை இளம்பெண் வாசிப்பதாக நாவல் விரிவடைகிறது.
யுத்தத்தை இரண்டு இடங்களில் மட்டுமே நாவல் தொட்டுச் செல்கிறது. இன்றளவும் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஏதேனும் துர் சம்பவம் அல்லது மரணம் ஏற்படுமானால், கெடுவாய்ப்பாக அந்த குழந்தையின் மீது பழி சுமத்தும் அறியாமை உள்ள மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாவலில் வரும் சிறுமி, கைக்குழந்தையாக இருக்கும் சமயத்தில் அவள் அம்மை தற்கொலை செய்து கொள்கிறார். எக்காரணமும் அறியாத அந்தக் குழந்தை மீது சுமத்தப்பட்ட பெயர்தான் இந்தத் தாயைத்தின்னி.