

தமிழ் இதழியல் துறையில் பிரபலமான பெயர் எஸ்.பாலசுப்ரமணியன். தமிழின் முன்னணி வார இதழான ‘ஆனந்த விகடன்’ பொற்காலத்தில் அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர். ஸ்மார்ட்போன் வருகைக்கு முந்தையை தலைமுறை ஆளுமைகளை உருவாக்கியதில் இவரது ஆசிரியத்துவத்தின் பங்களிப்பு முக்கியமானது. பாலசுப்ரமணியனின் தனிப்பட்ட ஆளுமைப் பண்புகள் பத்திரிகைத் துறையில் பரவலாகப் பேசப்பட்டதுதான்.
ஊழியர், முதலாளி என்கிற நிலைகளுக்கு அப்பாற்பட்டு அவர் விகடன் ஊழியர்களை அணுகுவார் என்பதற்கான உதாரணமாக இந்த நூல் பல சம்பவங்களை முன்னிறுத்துகிறது. விகடன் குழுமத்தில் பத்திரிகையாளராகவும், நிர்வாகப் பொறுப்பிலும், பாலசுப்ரமணியனின் உதவியாளராகவும் பணியாற்றிய ஜே.வி.நாதன் இந்த நூலை எழுதியிருப்பது இந்த உண்மையைத் துலங்கச் செய்கிறது.