

புத்தரை ஒரு மதத் துறவி என்பதற்கு அப்பாற்பட்டு அவரைச் சமூகச் சீர்திருத்தவாதி என்று அடையாளப்படுத்தலாம். பிற்காலத்தில் அம்பேத்கர் அவரை ஏற்று அந்த வழி பயணித்ததை இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கலாம். புத்தர் எல்லைகளைக் கடந்து பலரையும் பாதித்தவர்.
இந்தியாவைத் தாண்டி உலகத்தின் பல பகுதிகளில் புத்த மதம் பரவியுள்ளது. புத்தரின் வாழ்க்கையை பல இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே ‘சித்தார்த்தன்’ என்னும் நாவல் எழுதியுள்ளார். தமிழ் நவீன எழுத்தாளர்கள் பலரும் புத்தரின் கதையை குறுக்கிட்டு விசாரித்துள்ளனர்.