

இந்த நூலை வாசிக்கையில் ஏழு வயதில் பார்வையிழந்துபோன எழுத்தாளர் தேனி சீருடையானின் தன்வரலாறான ‘நிறங்களின் உலகம்’ நினைவுக்கு வந்தது. சீருடையான் 17 வயதில் மீண்டும் பார்வை பெற்றார். மு.முருகேசன் என்கிற பார்வை மாற்றுத் திறனாளி எதிர்கொள்ளும் சவால் வித்தியாசமானது. காட்சிப் பரிமாணம் அற்ற மனிதன், அது வாய்க்கப்பெற்ற மனிதர்களின் உலகத்தில் வாழ்வது.
'மாற்றுத் திறனாளர்கள் திறனற்றவர்கள் என்கிற பார்வை தட்டையானது. அதன் விளைவுகள் மோசமானவை' என்கிறார், முருகேசன். பதவி உயர்வில் பாரபட்சம், பணியிடத்தில் உரிய வேலைகள் மறுப்பு இவையெல்லாம் அவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினைகள்.