

நிலாவுக்குத் தேர்வு முடிந்தது. நினைத்ததை விடவும் மிக நன்றாக எழுதியிருந்தாள். தேர்வுக்குப் பின்னான ஆசிரியர்களின் கணிப்பில் நிலா பள்ளியில் முதலிடம் வரலாம் என்பது போலப் பேசிக்கொண்டார்கள். ஒவ்வோர் ஆண்டும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவியருக்குப் பணமுடிப்பு கொடுப்பார்கள்.
இந்த ஆண்டு அது நிலாவுக்குக் கிடைக்கலாம் என்கிற பேச்சு பள்ளி முழுவதும் பரவியது. அதற்குப் பிறகு அங்கிருப்போர் பார்க்கும் பார்வையில் ஒருவித மரியாதை தெரிந்தது. இது அவளுடைய கௌரவத்தை சட்டென உயர்த்திவிட்டதைப் போல உணர்ந்தாள்.