

இந்தியாவின் முன்னணி பிராண்டுகளாக இன்று வளர்ந்திருக்கும் தொழில்களின் சுவாரசியமான பின்னணியை நூலாசிரியர் இந்த நூலில் சொல்லியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.எஃப். டயர் உற்பத்தி நிறுவனம் இந்திய அளவில் டயர் உற்பத்தியில் கணிசமான பங்கு வகிக்கும் நிறுவனமாக மாறிய கதை இதில் சொல்லப்பட்டுள்ளது.
கே.எம்.மாமன் மாப்பிள்ளை என்கிற ஒரு மலையாளி சென்னை திருவெற்றியூரில் ஒரு விளையாட்டு பலூன் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். பிறகு அதுதான் குட் இயர், டன்லப் போன்ற வெளிநாட்டு பிராண்டுகளுடன் போட்டிபோட்டு அவற்றையும் முந்தி முன்னணி டயர் பிராண்ட் ஆகியது.