

இன்றைய காலம் என்பது செயற்கை நுண்ணறிவு (AI - Artificial intelligence) ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கும் காலம். நம்மில் பலரும் அதிசயத்துடன் ஏஐயின் பங்களிப்பைப் பார்க்கிறோம். அதை விளையாட்டுத் தனமாகப் பரிசோதித்துப் பார்க்கிறோம். ஆனால், ஏஐயைப் பிரயோஜனமாகப் பயன்படுத்தித் தொழில்களில், வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெற முடியும். அதன் வழிமுறைகளைச் சொல்லும் நூல் இது.
இதை உதாரணங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். 15பேர் சேர்ந்து தீபாவளி கொண்டாட விழா அலங்காரத்துக்கு என்ன செலவாகும், எப்படிச் செய்யலாம், கேரளாவிலிருந்து மும்பைக்கு 3 நாள் சுற்றுலா செல்ல பட்ஜெட் என்ன ஆகும் எனப் பலதும் ஏஐயிடம் கேட்கலாம். பதில் கிடைக்கும்.