இலக்கியம்
வெக்கை மண்ணின் கதைகள்
இப்பெருநிலம் எங்கும் எழுதிய, எழுதப்பாடாத கதைகள் பெருமளவு கிடக்கின்றன. அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றைச் சொல்லிச் செல்கின்றன. அல்லது சொல்ல வருவதாக இருக்கின்றன. எழுதுபவர்களைப் போலவே, ஒவ்வொரு பகுதி மண்ணுக்கும் ஒரு கதை இயல்பு இருக்கிறது. அதிலும் கரிசலின் புழுதிக்கு மட்டும் தனித்துவம் உண்டு.
அது, கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி விதைத்த மண்ணில் இருந்து தொடரும் மரபு. இந்த வெக்கை மண்ணின் கதைகளைப் புதியவர்களின் மொழியில் ‘கரிசல் கதைகள்’ என வாசிப்பது நல் அனுபவம். கரிசல் இலக்கியக் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது.
