

இந்தக் கவிதை நூல், போர் சார்ந்த அக உணர்வினைச் சொல்வதன் மூலம் புதிய சொல்முறையில் எழுதப்பட்டுள்ளது. இதுபோல போர், அதுசார்ந்த இழப்புகளையும், மனச்சிக்கல்களையும் நூல் முழுக்கச் சொல்லப்பட்டுள்ளது. தமிழில் முரண்தொடை என்று ஓர் இலக்கணம் இருக்கிறது. முரண்பட்ட இரண்டு விஷயங்களைக் அருகருகே உவமையாக வைப்பது. இவ்வாறு எதிர் எதிரான விஷயங்களை அருகருகே வைக்கிற உத்தியை ஜோசப் ராஜா கவிதையில் செய்கிறார்.
காலைப் பொழுதில் நம் அன்றாடச் செயல்களை வரிசையாக அடுக்கிவைத்து அதை அடுத்து காஸாவின் அகதிகள் முகாமின் காலைப் பொழுதை அடுக்குகிறார். அவர் செய்வது இரண்டு காட்சிகளையும் அருகருகே வைப்பது மட்டும்தான். வெடிகுண்டுகள் நம் மனதில் வெடிக்கின்றன.