கண்ணம்மா | அகத்தில் அசையும் நதி 8

கண்ணம்மா | அகத்தில் அசையும் நதி 8
Updated on
3 min read

தன்னுடன் நடவு நடும் பெண்கள் எல்லாரும் சரசரவென நட்டுக்கொண்டு போகிறார்கள். ஆனால், கண்ணம்மாவால் ஒரு நாற்றைக்கூட வயலில் ஊன்ற முடியவில்லை. ஊன்றிவிட்டுக் கையை எடுப்பதற்குள்ளாக அது சேற்றைவிட்டுக் கிளம்பி மேலே வந்து தண்ணீரில் மிதக்கிறது.

‘அய்யோ தெய்வமே, இது என்ன கொடுமை?’ எனத் துடித்துப் பிடித்து எழுகிறாள். தான் கண்ட கெட்ட கனவிலிருந்து விடுபடும் முன்பாக மருத்துவமனையில் இப்படித் தூங்கிவிட்டோமே என வருந்தி பிள்ளையைத் தடவிப் பார்க்கிறாள். அவன் மூச்சற்று வதங்கிய வாழைத்தண்டுபோல் கிடக்கிறான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in