

எழுதுகிறவரின் சார்புத்தன்மையோடும் கண்ணோட்டத்தோடும் பதிவுசெய்யப்பட்ட வரலாறுகள் இங்கே ஏராளம். முகலாய அரசை இந்தியாவில் 50 ஆண்டுகள் வழிநடத்தியவரும் இந்திய நிலப்பரப்பில் பெரும்பான்மைப் பகுதியை ஆட்சி செய்தவருமான ஔரங்கசீப் குறித்து எழுதப்பட்ட வரலாறுகள் சிலவற்றில் புனைவும் கற்பிதமும் கலந்திருக்கின்றன.
ஔரங்கசீப் குறித்துச் சொல்லப்பட்டவற்றின் பின்னணியை ஆராய்ந்து உண்மைக்கு நெருக்கமாக எழுதியிருக்கிறார் கலந்தர் ஹாரிஸ். அனைத்துச் சமயங்களையும் போற்றிய அவர் மதவெறியராகவே வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருப்பதையும் இந்த நூல் விவாதிக்கிறது. வெறும் தகவல்களாக அடுக்காமல் சுவாரசிய நடையில் சம்பவங்களைத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர். - பிருந்தா சீனிவாசன்