

இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களுக்கு இலங்கை அரசும் ராணுவமும் மட்டுமின்றி, தமிழ்ப் போராளிக் குழுக்களிடம் நிலவிய ஜனநாயகமற்ற பாசிசப் போக்கும் பிரதான காரணம் என்கிற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
தமிழர்கள் பேரினவாதத்தால் கொல்லப்பட்டது மட்டுமின்றி, தமிழர்களாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட ஏராளமான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இலங்கையில் மட்டுமின்றி, புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலும் தமிழர்கள் சந்தித்த துயரங்களுக்கான காரணங்களைத் தனது எழுத்தின் மூலம் விசாரணை செய்கிறார், தற்போது நார்வேயில் வசித்துவரும் எழுத்தாளர் நவமகன்.